அரூர்

Jun 06, 2025, viewer - 830, ஸ்ரீனிவாசன்   நிருபர் (தருமபுரி).

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மான்.

 

பாப்பிரெட்டிப்பட்டி ஜூன்:06

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள 

பில்பருத்தி கிராமத்தை ஒட்டி வனப்பகுதி உள்ளது .இந்த வனத்திலிருந்து உணவு தேடி நேற்று  ஊருக்குள் வந்த மானை 3 தெருநாய்கள் துரத்தி சென்றதில் மான் மற்றும் 3 நாய்களும் கிணற்றில்  விழுந்து உள்ளன. இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில் 

தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று  கிணற்றில், இறங்கி இறந்த நிலையில் கிடந்த மானையும் உயிருடன் இருந்த 3 நாய்களையும் மீட்டனர்‌. மேலும்  இறந்த மானை  வனத்துறை அலுவலர் ஜெயவேலிடம் ஒப்படைத்தனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.